அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
புகாரியின் ஒரு ஹதீஸில்,
ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்களின் கூற்றுப்படி, நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதற்கான மிகச் சிறந்த மற்றும் உயர்ந்த வழி, சையதுல் இஸ்திஃபர் என்றும் மேலும் யார் ஒருவர் அதை உறுதியான இறை நம்பிக்கையுடன் காலையில் ஓதி மாலைக்கு முன்பு மரணித்தால், அவர் சொர்க்க மக்களிடமிருந்து ஒருவர் ஆவார்; மேலும் யார் ஒருவர் அதை உறுதியான இறை நம்பிக்கையுடன் இரவில் ஓதி காலைக்கு முன்பு மரணித்தால் , அவர் சொர்க்க மக்களிடமிருந்து ஒருவர் ஆவார்.
சஹிஹ் அல் புகாரி:6306
اللّٰهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِيْ، فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّاأَنْتَ۔
அல்லாஹும்ம அன்த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்த கலக்தனீ வஅன அப்துக வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்தத ஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு லக பினிஃமதி(க்)க அலய்ய, வஅபூஃவுல(க்)க பிதன்(ம்)பீ ஃபக்ஃபிர்லீ ஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத்துனூப இல்லா அன்(த்)த
பொருள் :
அல்லாஹ் நீயே என் இறைவன். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. நான் உனக்கு செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்றவரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே எனக்கு செய்த அருளை நான் ஒப்பு கொள்கிறேன் நான் செய்த பாவம் அனைத்தையும் உன்னிடம் மறைக்காமல் ஒப்பு கொள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிக்க உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
பாவமன்னிப்பு கேட்பது ஒரு நபரின் பலத்தை யும் அவருடைய ஈமானையும் அதிகரிக்கிறது.
“என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
(ஹூது 11:52)
அல்லாஹ்வின் பாவமன்னிப்பு பகல் அல்லது இரவின் சில நேரங்களில் மட்டும் கூடாது, நாம் எல்லா நேரங்களிலும் உறுதியான நம்பிக்கையுடன் அவனை நினைவு கூறும் போது நாம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
அல்லாஹ் மிகவும் இரக்கமுள்ளவன்
“எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் - அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.”
(ஸூரத்துன்னிஸா 4:110)
உங்கள் பாவங்கள் ஏராளமாக இருந்தாலும், அல்லாஹ்வின் கருணை எல்லையற்றது. நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பாவங்களையும் மன்னிப்பானாக! ஆமீன்
Credit : Www.rafahchannels.com
pdf :
No comments:
Post a Comment